மலையாள திருநங்கை நடிகை மர்ம மரணம் | அதிகாலை காட்சிகளுக்கு வருகிறது ஆப்பு : அரசிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம் | தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்த நடிகர் விஜய்! | கமலின் விக்ரம் படத்தின் கதை கசிந்தது | அம்மாவாகி விட்டால் மூலையில் உட்கார்ந்து கொண்டு அழ வேண்டுமா? விஜயலட்சுமி காட்டமான பதில் | ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து - போனி கபூர் | ‛ரஜினி 169' எப்போது ஆரம்பம் | விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | சித்தார்த் நடிக்கும் புதிய ஹிந்தி வெப் தொடர் | கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் 'தி லெஜண்ட்' பட பர்ஸ்ட் லுக் |
உலக அளவில் புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சியை இந்தியாவில் தமிழில் முன்னணி சேனல் ஒன்று பிரம்மாண்டமாக தயாரித்து வழங்கியது. மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனை நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கு வெர்ஷனை நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்கினர். 30 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் 14 பேர் கலந்து கொண்டனர். அதில் 10 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தேவகி, கிருத்திகா, வின்னி மற்றும் நித்தியா ஆகியோரில் தேவகி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மாஸ்டர் செப் பட்டம் வென்றார். கடந்த நவம்பர் 14 ஆம் தேதியோடு இந்நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில் அடுத்த சீசன் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, மாஸ்டர் செப் 2 வது சீசன் வருகிற ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரவண பிரசாத் கூறியுள்ளார். இரண்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா? என்பது குறித்து சரிவர தெரியவில்லை. செப் கௌஷிக், செப் ஆர்த்தி, செப் ஹரிஷீன் ஆகியோர் இரண்டாவது சீசனிலும் நடுவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.