பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
உலக அளவில் புகழ் பெற்ற சமையல் நிகழ்ச்சியான மாஸ்டர் செப் நிகழ்ச்சியை இந்தியாவில் தமிழில் முன்னணி சேனல் ஒன்று பிரம்மாண்டமாக தயாரித்து வழங்கியது. மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனை நடிகர் விஜய் சேதுபதியும், தெலுங்கு வெர்ஷனை நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்கினர். 30 எபிசோடுகள் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் 14 பேர் கலந்து கொண்டனர். அதில் 10 பேர் எலிமினேட் செய்யப்பட்டனர். இறுதிப்போட்டிக்குள் நுழைந்த தேவகி, கிருத்திகா, வின்னி மற்றும் நித்தியா ஆகியோரில் தேவகி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு மாஸ்டர் செப் பட்டம் வென்றார். கடந்த நவம்பர் 14 ஆம் தேதியோடு இந்நிகழ்ச்சி முடிவுற்ற நிலையில் அடுத்த சீசன் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, மாஸ்டர் செப் 2 வது சீசன் வருகிற ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரவண பிரசாத் கூறியுள்ளார். இரண்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா? என்பது குறித்து சரிவர தெரியவில்லை. செப் கௌஷிக், செப் ஆர்த்தி, செப் ஹரிஷீன் ஆகியோர் இரண்டாவது சீசனிலும் நடுவர்களாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.