கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ .ஆர். ரகுமான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். தற்போது இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பாகம் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை லண்டன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் பிரமாண்டமாக நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதோடு இந்த இசை வெளியீடு விழாவில் படக்குழுவினர் மட்டுமன்றி உலக சினிமாவில் உள்ள பல பிரபலங்களையும் கலந்து கொள்ள வைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.