22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மற்றும் பலர் நடித்துள்ள 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. முதல் நாள் வசூலாக 71 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 2021ம் ஆண்டில் முதல் நாளில் அதிக வசூல் புரிந்த படம் 'புஷ்பா' என்றும் அதில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
அல்லு அர்ஜுன் நடித்து இதுவரை வெளிவந்த படங்களின் முதல் நாள் வசூல் சாதனையையும் இப்படம் முறியடித்துள்ளது. இப்படம் மூலம் பான்-இந்தியா ஸ்டார் ஆக அல்லு அர்ஜுன் உயர்ந்துள்ளார்.
அவர் நடித்த தெலுங்குப் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு யு டியூபில் வெளியாக அதிகமான பார்வைகளைப் பெற்ற படங்களாக உள்ளன. ஆனால், அவரது படங்கள் தெலுங்கில் வெளிவரும் நாளில் ஹிந்தியிலும் வெளியாவது 'புஷ்பா' படத்தில்தான் நடந்துள்ளது.
இத்தனைக்கும் ஹிந்தியில் படத்தை பெரிய அளவில் பிரமோஷனும் செய்யவில்லை. இருந்தாலும் அங்கு முதல் நாளில் 3 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம்.
தமிழில் கூட நேற்று இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், தமிழிலும் படத்தை சரியாக பிரமோஷன் செய்யவில்லை. பத்திரிகையாளர் காட்சியைக் கூட நாளைக்குத்தான் நடத்துகிறார்கள். தெலுங்கில் காட்டிய அக்கறையை மற்ற நான்கு மொழிகளுக்கும் காட்டியிருந்தால் இப்படம் இன்னும் அதிகமாக வசூலித்திருக்கும் என டோலிவுட்டில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.