'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் கமிட்டாகி நடித்து வந்தார் வடிவேலு. ஆனால் படப்பிடிப்பு தளத்துக்கு சென்ற பிறகு கதையில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று வடிவேலு சொன்னதை அடுத்து அவருக்கும் டைரக்டர் சிம்புதேவனுக்கு மிடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்றது. அதன்பிறகு இரு தரப்பிலும் நடந்த விசாரணைக்கு பிறகு வடிவேலுவுக்கு மறைமுக ரெட் கார்டு போட்டு வைத்திருந்தார்கள். இதனால் வடிவேலுவை புதிய படங்களுக்கு யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் டைரக்டர் ஷங்கர் வடிவேலுவுக்கு இடையே சமரசம் ஏற்பட்ட நிலையில் ரெக்கார்டு நீக்கப்பட்டது. இதையடுத்து சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். அதோடு சில நாய்களுடன் வடிவேலு போஸ் கொடுக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாள் வடிவேலு சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி இருக்கிறார் சுராஜ். இந்நிலையில் படத்தின் மோஷன் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர். அவை வைரலாகின.