ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, கடந்த வருடம் எதிர்பாராத வகையில் உயிரிழந்தார். ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள சித்ராவை, ரசிகர்கள் இப்போதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அவர் இறந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில் பலரும் தங்களது அஞ்சலியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ராவுடன் இணைந்து நடித்த ஸ்டாலின் முத்துவும், ஹேமாவும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளனர்.
ஸ்டாலின் முத்து கூறுகையில், "மனித வாழ்வில் மரணம் இயற்கை தான். இயற்கையால் வந்தால் ஏற்கலாம். நீ வாழ வேண்டிய வயதில் வாடிய மலராகி உதிர்ந்து போன உன்னை எப்படி மறப்பது" என்றார்.
அதே போல் ஹேமாவும், "நீ இல்லாமல் ஒரு வருடம் கடந்துவிட்டது. நீ இப்போது சந்தோசமாக இருப்பாய் என நம்புகிறேன். நீ விரும்பியது போல் ஒரு வாழ்க்கையுடன் நீ திரும்பி வர வேண்டும் என கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். உன்னை அதிகம் மிஸ் செய்கிறேன். இது வெறும் போஸ்ட் அல்ல. என் நினைவு. லவ் யூ." என கூறியுள்ளார்.