ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, கடந்த வருடம் எதிர்பாராத வகையில் உயிரிழந்தார். ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள சித்ராவை, ரசிகர்கள் இப்போதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அவர் இறந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில் பலரும் தங்களது அஞ்சலியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ராவுடன் இணைந்து நடித்த ஸ்டாலின் முத்துவும், ஹேமாவும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளனர்.
ஸ்டாலின் முத்து கூறுகையில், "மனித வாழ்வில் மரணம் இயற்கை தான். இயற்கையால் வந்தால் ஏற்கலாம். நீ வாழ வேண்டிய வயதில் வாடிய மலராகி உதிர்ந்து போன உன்னை எப்படி மறப்பது" என்றார்.
அதே போல் ஹேமாவும், "நீ இல்லாமல் ஒரு வருடம் கடந்துவிட்டது. நீ இப்போது சந்தோசமாக இருப்பாய் என நம்புகிறேன். நீ விரும்பியது போல் ஒரு வாழ்க்கையுடன் நீ திரும்பி வர வேண்டும் என கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். உன்னை அதிகம் மிஸ் செய்கிறேன். இது வெறும் போஸ்ட் அல்ல. என் நினைவு. லவ் யூ." என கூறியுள்ளார்.