பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா, கடந்த வருடம் எதிர்பாராத வகையில் உயிரிழந்தார். ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள சித்ராவை, ரசிகர்கள் இப்போதும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், அவர் இறந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில் பலரும் தங்களது அஞ்சலியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பாண்டியன் ஸ்டோர்ஸில் சித்ராவுடன் இணைந்து நடித்த ஸ்டாலின் முத்துவும், ஹேமாவும் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளனர்.
ஸ்டாலின் முத்து கூறுகையில், "மனித வாழ்வில் மரணம் இயற்கை தான். இயற்கையால் வந்தால் ஏற்கலாம். நீ வாழ வேண்டிய வயதில் வாடிய மலராகி உதிர்ந்து போன உன்னை எப்படி மறப்பது" என்றார்.
அதே போல் ஹேமாவும், "நீ இல்லாமல் ஒரு வருடம் கடந்துவிட்டது. நீ இப்போது சந்தோசமாக இருப்பாய் என நம்புகிறேன். நீ விரும்பியது போல் ஒரு வாழ்க்கையுடன் நீ திரும்பி வர வேண்டும் என கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். உன்னை அதிகம் மிஸ் செய்கிறேன். இது வெறும் போஸ்ட் அல்ல. என் நினைவு. லவ் யூ." என கூறியுள்ளார்.