தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த எழுத்தாளர் கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவல், தற்போது அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. மணிரத்னம் இயக்கும் இப்படம் இருபாகங்களாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார் சோழநாட்டு இளவரசி கதையின் நாயகி குந்தவை கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். இது மிகவும் தைரியமான கதாபாத்திரம். வாள் சண்டைக் காட்சிகளும் இருக்கின்றன. இதற்காக த்ரிஷா பண்டையகால தமிழை அவரே கற்று சொந்தக் குரலில் டப்பிங் செய்துள்ளராம். மேலும் இந்தப் படத்திற்காக குதிரைப் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பர்ஸ்ட் காப்பி பார்த்தவர்கள் த்ரிஷாவின் நடிப்பை பார்த்து வியந்துள்ளதாகக் கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷாவின் கதாபாத்திரம் அவரது கேரியரில் மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன. பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.