'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
திரையுலக நடிகைகளில் பலரும் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தான் அதிகம் பதிவிடுவது வழக்கம். அவர்களது பலவிதமான புகைப்படங்களைப் பதிவிட அந்த வலைளத்தைத்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைப் பெற்றிருப்பதில் நடிகை ராஷ்மிகா மந்தனா தான் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு 24.8 மில்லியன் பாலோயர்கள் உள்ளார்கள். அவருக்கு அடுத்து 20.2 மில்லியன் பாலோயர்களுடன் காஜல் அகர்வால் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவருக்கடுத்தபடியாக தற்போது 20 மில்லியன் பாலோயர்களைத் தொட்டு சமந்தா மூன்றாவது இடத்தில் உள்ளார்.
20 மில்லியன் பாலோயர்களைப் பெற்றதையடுத்து “உங்கள் அனைவரின் அன்புக்கும் நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார் சமந்தா. சமீபத்தில் திருமண வாழ்க்கையிலிருந்து பிரிந்தாலும் சமந்தாவிற்கு ரசிகர்களின் ஆதரவு குறையவில்லை என்பதை இது காட்டுகிறது.
சமந்தா தற்போது தமிழில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். 'புஷ்பா' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.