Advertisement

சிறப்புச்செய்திகள்

லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிராமத்துப் பெண்ணாக மாறியது எப்படி - ராஷ்மிகா

04 டிச, 2021 - 10:09 IST
எழுத்தின் அளவு:
Rashmika-replied-how-she-prepared-for-village-role

தெலுங்குத் திரையுலகில் கிளாமர் டாலாக வலம் வருபவர் ராஷ்மிகா. தமிழில் 'சுல்தான்' படத்தில் மட்டுமே நடித்தார். மீண்டும் இந்தப் பக்கம் எப்போது வருவார் என தமிழ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ராஷ்மிகாவின் அடுத்த பெரிய வெளியீடாக 'புஷ்பா' படம் வெளிவர உள்ளது. அல்லு அர்ஜுன் ஜோடியாக வள்ளி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. இயல்பாகவே நல்ல சிவப்பாக இருக்கும் ராஷ்மிகா இந்தப் படத்திற்காக கருப்பு நிற மேக்கப்புடன் கிராமத்துப பெண்ணாக மாறியிருக்கிறார்.

சிட்டியிலேயே பிறந்து வளர்ந்த பெண்களுக்கு கிராமத்துப் பெண்களின் பழக்க, வழக்கம், நடை, உடை அவ்வளவு சீக்கிரம் வராது. அதனால் இந்தப் படத்தில் நடிப்பதற்காக பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டாராம் ராஷ்மிகா.

இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில், “இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். கிராமத்து பெண்களின் மேனரிசங்கள், அவர்களது முகபாவங்கள் எப்படி இருக்கும் என்பதை கற்றுக் கொண்டேன். திருப்பதி அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள பெண்களுடன் பழகினேன், பேசினேன். அவர்களது வாழ்க்கை முறை எப்படி உள்ளது, உடல்மொழி எப்படி உள்ளது என்றும் கூர்ந்து கவனித்து தெரிந்து கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தலைப் பற்றிய படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 6ம் தேதி வெளியாகிறது, படம் டிசம்பர் 17ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது முடிவெடுக்காதீர்கள் - செல்வராகவன்வேதனையின் உச்சத்தில் இருக்கும்போது ... சமந்தாவை பின் தொடரும் 20 மில்லியன் பேர் சமந்தாவை பின் தொடரும் 20 மில்லியன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in