'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

தெலுங்குத் திரையுலகில் கிளாமர் டாலாக வலம் வருபவர் ராஷ்மிகா. தமிழில் 'சுல்தான்' படத்தில் மட்டுமே நடித்தார். மீண்டும் இந்தப் பக்கம் எப்போது வருவார் என தமிழ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ராஷ்மிகாவின் அடுத்த பெரிய வெளியீடாக 'புஷ்பா' படம் வெளிவர உள்ளது. அல்லு அர்ஜுன் ஜோடியாக வள்ளி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. இயல்பாகவே நல்ல சிவப்பாக இருக்கும் ராஷ்மிகா இந்தப் படத்திற்காக கருப்பு நிற மேக்கப்புடன் கிராமத்துப பெண்ணாக மாறியிருக்கிறார்.
சிட்டியிலேயே பிறந்து வளர்ந்த பெண்களுக்கு கிராமத்துப் பெண்களின் பழக்க, வழக்கம், நடை, உடை அவ்வளவு சீக்கிரம் வராது. அதனால் இந்தப் படத்தில் நடிப்பதற்காக பிரத்யேக பயிற்சிகளை மேற்கொண்டாராம் ராஷ்மிகா.
இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில், “இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டேன். கிராமத்து பெண்களின் மேனரிசங்கள், அவர்களது முகபாவங்கள் எப்படி இருக்கும் என்பதை கற்றுக் கொண்டேன். திருப்பதி அருகில் உள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள பெண்களுடன் பழகினேன், பேசினேன். அவர்களது வாழ்க்கை முறை எப்படி உள்ளது, உடல்மொழி எப்படி உள்ளது என்றும் கூர்ந்து கவனித்து தெரிந்து கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் நடக்கும் செம்மரக் கடத்தலைப் பற்றிய படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் டிசம்பர் 6ம் தேதி வெளியாகிறது, படம் டிசம்பர் 17ம் தேதி ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.