ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா உலகில் உயர்ந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையில் உள்ள விருது கோல்டன் குளோப். இந்த விருதை பெரும் பெரும்பாலான படங்கள் ஆஸ்கர் விருதை பெறும் என்பார்கள். 2022ம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா ஜனவரி 9 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் வெளிநாட்டு படப்பிரிவின் பட்டியலில் ஜெய்பீம் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த படத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோ மோல் நடித்திருந்தார்கள். த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார், சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்திருந்தார்கள். இந்த தகவலை சூர்யாவின் 2டி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியான ராஜசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.