15 நாள் சினிமா, 15 நாள் கார் ரேஸ் : அஜித் எடுத்த முடிவு | விஜய்யின் ரசிகர் கூட்டத்தை பார்த்து பிரமிப்பாக உள்ளது : கவுசல்யா | பைக் ரைடிங் : மஞ்சு வாரியருக்கு அஜித் தந்த அட்வைஸ் | ஜனநாயகன் படம் லீக் : 500 கோடி பிஸினஸிற்கு பாதிப்பு, என்ன செய்ய போகிறார் விஜய்...? | 'ஜனநாயகன்' லீக் விவகாரம்: முதல் ஆளாக குரல் கொடுத்த சிவகார்த்திகேயன் | 'ஜனநாயகன்' படத்தின் காட்சிகள் லீக்: தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை | ஹாலிவுட்டிற்கு செல்லும் சன்னி லியோன் | சுந்தர்.சி மீது பணமோசடி புகார் | மிருணாள் தாக்கூருக்காக வித்தியாசமான கதாபாத்திரத்தை உருவாக்கி வைத்திருக்கும் அனுராக் காஷ்யப் | பிளாஷ்பேக் : சினிமாவில் நிலைத்து நிற்க முடியாமல் போன டி.எஸ்.பாலைய்யாவின் வாரிசு |

பிரபல கன்னட நடிகை ஸ்ருதி ஹரிகரன். இவர் தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன், சோலோ படங்களில் நடித்துள்ளார். நிலா, அமெரிக்க மாப்பிள்ளை உள்பட சில வெப் சீரிசிலும் நடித்துள்ளார். கன்னடத்தில் விஸ்மையா என்ற படத்தில் நடித்தபோது பிரபல நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2018ம் ஆண்டு மீ டூ புகார் கூறினார். இதுகுறித்து பெங்களூரு போலீசிலும் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு கர்நாடக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு தொடரப்பட்டு 3 ஆண்டுகள் ஆனபிறகும் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. அர்ஜூனுக்கு எதிரான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று போலீசார் கூறி வந்தனர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், சக நடிகர்கள், அர்ஜூனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டுகளையும் முன் வைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் எந்தவிதமான சாட்சிகளும் இல்லையென்று போலீசார் ஆவணங்களை தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிமன்றம் போதிய, ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் அர்ஜூனை இந்த வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.