சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு | நிஜ வாழ்க்கையில் நடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை! : சொல்கிறார் பார்வதி | நாகசைதன்யா 24வது படத்தில் மீனாட்சி சவுத்ரி முதல் பார்வை வெளியீடு | மீண்டும் ஒரு அதிரடி, மாஸ் என்டர்டெயின் படம் : விஷால் | ஜாய் கிரிசில்டா உடன் திருமணம், குழந்தை : ஒப்புக் கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ் | 2025... 10 மாதங்கள், 222 படங்கள் : வெற்றிப் படங்கள் 12 மட்டுமே… | சாமியாரான பாலிவுட் நடிகை |

தென்னிந்தியத் திரையுலகத்தில் குறிப்பாக தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது  பான்-இந்தியா படங்கள் என அடுத்தடுத்து சில படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அவர்களுடன் ஒப்பிடும் போது பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ரஜினிகாந்த் பான்-இந்தியா ஸ்டார், இன்னும் கூடுதலாகச் சொல்ல வேண்டுமென்றால் பான்-வேர்ல்டு ஸ்டார் ஆக இருந்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் தென்னிந்தியப் படங்களுக்கு தனது படங்களின் மூலம்  முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் ரஜினிகாந்த். அவருடைய படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா என பல இடங்களில் வசூலைக் கொட்டியது. அவரது வழியைப் பின்பற்றித்தான் பல தென்னிந்திய நடிகர்கள் முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே சமயம், ரஜினிகாந்த்தின் சமீபத்திய படங்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் குறிப்பிடத்தக்க அளவுக்கு வசூல செய்யும் நிலை உருவாகியுள்ளது. மற்ற மாநிலங்களில் வசூலில் தள்ளாடுகின்றன. பொதுவாக ஆந்திரா, தெலங்கானாவில் ரஜினிகாந்த் படங்கள் 50 கோடி வரை வசூலித்துள்ளன. சமீபத்தில் வெளியான 'அண்ணாத்த' படம் 10 கோடி வசூலையே தடுமாறித்தான் பெற வேண்டியதாகி உள்ளது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணாத்த படத்தை சிலர் மட்டுமே 200 கோடி வசூல் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் தீபாவளிக்கும் அடுத்த சில நாட்களுக்கும் மட்டுமே படத்தின் வசூல் சிறப்பாக இருந்தது. அதன்பின் மழை காரணமாக மிகவும் மோசமாகிவிட்டது என்பதுதான் உண்மை நிலை என்கிறார்கள்.
அடுத்து சிறப்பான படம் ஒன்றைக் கொடுத்துவிட்டு நடிப்பிலிருந்து ரஜினிகாந்த் ஓய்வு பெறுவார் என தெலுங்குத் திரையுலகத்தில் பேசிக் கொள்கிறார்களாம்.