பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்ததை அடுத்து மீண்டும் சினிமாவில் ஜெட் வேகத்தில் தனது பயணத்தை தொடங்கி இருக்கிறார் சமந்தா. அதன் காரணமாக தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் கால்பதிக்க தயாராகிவிட்டார். அதோடு தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் ஐந்து மொழிகளில் இரண்டு பாகங்களாக தயாராகி வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் சம்மதம் தெரிவிக்கிறார் சமந்தா.
ரூ 250 கோடி பட்ஜெட்டில் செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைக்க சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த படக்குழு இப்போது சமந்தாவிடம் அது குறித்து பேசி இருப்பதோடு அந்த பாடல் நடனம் ஆட அவருக்கு ஒன்றரை கோடி சம்பளம் பேசியதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் சிங்கிள் பாடலுக்கு நடனமாட தயங்கிய சமந்தா, இயக்குனர் சுகுமார் தனக்கு நெருக்கமான நண்பர் என்பதால் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.