பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் | பராசக்தி படத்திற்காக சிறப்பு கண்காட்சி |

மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்கும் சத்யதேவ் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் கடந்த ஒரு வார காலமாக சத்ய தேவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன.
கதைப்படி நயன்தாராவின் கணவராகவும் படத்தின் முக்கிய வில்லனாகவும் சத்யதேவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் சத்யதேவ் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு பதிலாக தனது கணவர் கதாபாத்திரத்துக்கு ஒரு முன்னணி நடிகரை ஒப்பந்த செய்யுமாறு நயன்தாரா கூறி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது அந்த செய்தியை காட்பாதர் படக்குழு மறுத்துள்ளது.
இந்தப் படத்தில் சத்ய தேவ்விற்கு ஜோடியாக நடிப்பது குறித்து நயன்தாரா எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. திட்டமிட்டபடி ஜனவரி மாதம் முதல் சத்யதேவ்வுடன் இணைந்து நயன்தாரா நடிக்கப் போகிறார். மேலும், தற்போது நயன்தாரா, சத்யதேவ் ஆகிய இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் அவர்கள் தேதி கிடைக்காததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருட ஜனவரி மாதம் முதல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த காட்பாதர் படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.