கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்கும் சத்யதேவ் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் கடந்த ஒரு வார காலமாக சத்ய தேவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன.
கதைப்படி நயன்தாராவின் கணவராகவும் படத்தின் முக்கிய வில்லனாகவும் சத்யதேவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் சத்யதேவ் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு பதிலாக தனது கணவர் கதாபாத்திரத்துக்கு ஒரு முன்னணி நடிகரை ஒப்பந்த செய்யுமாறு நயன்தாரா கூறி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது அந்த செய்தியை காட்பாதர் படக்குழு மறுத்துள்ளது.
இந்தப் படத்தில் சத்ய தேவ்விற்கு ஜோடியாக நடிப்பது குறித்து நயன்தாரா எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. திட்டமிட்டபடி ஜனவரி மாதம் முதல் சத்யதேவ்வுடன் இணைந்து நயன்தாரா நடிக்கப் போகிறார். மேலும், தற்போது நயன்தாரா, சத்யதேவ் ஆகிய இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் அவர்கள் தேதி கிடைக்காததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருட ஜனவரி மாதம் முதல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த காட்பாதர் படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.