தமன்னாவின் 36வது பிறந்தநாள் பார்ட்டியில் பங்கேற்ற மிருணாள் தாக்கூர்! | நிதி அகர்வாலை தொடர்ந்து கூட்டணி நெரிசலில் சிக்கிக்கொண்ட சமந்தா! | வெளிநாட்டு முன்பதிவில் 4 கோடி வசூலித்த விஜய்யின் 'ஜனநாயகன்' | மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சதீஷ் : இன்னொரு ஹீரோ ஆதி சாய்குமார் | தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ஒரு பதவிக்கு அல்லாமல் சில பதவிகளுக்கு சேர்த்து போட்டியிடும் தயாரிப்பாளர்கள் | ஜன., 16ல் துவங்கும் சிசிஎல் கிரிக்கெட் போட்டி: விளம்பர துாதர் நடிகை மீனா | சென்னையை மறக்காத சிவராஜ்குமார் : தம்பி குறித்து உருக்கம் | 2025 : மிகவும் குறைந்து போன ஓடிடி நேரடி வெளியீடுகள் | படையப்பாவை பார்த்து ரசித்த நீலாம்பரி | பிளாஷ்பேக்: தமிழ் திரையுலகிற்கு டி எம் சவுந்தரராஜன் என்ற பாடகரை அடையாளம் காட்டிய “தூக்கு தூக்கி” |

மலையாளத்தில் வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கான காட்பாதர் படத்தில் சிரஞ்சீவி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்கும் சத்யதேவ் ஜோடியாக நயன்தாரா நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் கடந்த ஒரு வார காலமாக சத்ய தேவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மறுத்துவிட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன.
கதைப்படி நயன்தாராவின் கணவராகவும் படத்தின் முக்கிய வில்லனாகவும் சத்யதேவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் சத்யதேவ் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு பதிலாக தனது கணவர் கதாபாத்திரத்துக்கு ஒரு முன்னணி நடிகரை ஒப்பந்த செய்யுமாறு நயன்தாரா கூறி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது அந்த செய்தியை காட்பாதர் படக்குழு மறுத்துள்ளது.
இந்தப் படத்தில் சத்ய தேவ்விற்கு ஜோடியாக நடிப்பது குறித்து நயன்தாரா எந்த ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை. திட்டமிட்டபடி ஜனவரி மாதம் முதல் சத்யதேவ்வுடன் இணைந்து நயன்தாரா நடிக்கப் போகிறார். மேலும், தற்போது நயன்தாரா, சத்யதேவ் ஆகிய இருவரும் பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் அவர்கள் தேதி கிடைக்காததால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வருட ஜனவரி மாதம் முதல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த காட்பாதர் படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.