கடந்த வாரம் ஒரு வாரிசு அறிமுகம், இந்த வாரம் மற்றொரு வாரிசு அறிமுகம் | கார்த்தி படத்தில் இணைந்த கல்யாணி | கடந்த 40 ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் : நடிகர் சசிகுமார் | ''விஜய்சேதுபதி மகன் விஜய் மாதிரி வருவார்'': வனிதா விஜயகுமார் | ஒரே நாளில் மீட்கப்பட்ட உன்னி முகுந்தனின் இன்ஸ்டாகிராம் கணக்கு | 50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து |
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகத்தில் பலரும் பான் - இந்தியா படங்களை உருவாக்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த இரண்டு மாதங்களுக்குள்ளாக 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம்' ஆகிய பான்-இந்தியா படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'புஷ்பா, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் பாடல்களை மட்டும் யு-டியூபில் வெளியிட்டுள்ளார்கள். 'ராதே ஷ்யாம்' படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாக உள்ளது.
'புஷ்பா' படத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'சாமி சாமி' பாடல் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது. வித்தியாசமான டியூன், குரல், வரிகள், ராஷ்மிகாவின் கிளாமர் என இப்பாடல் ரசிகர்களிடம் உடனடியாக சென்று சேர்ந்தது. ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இதன் தெலுங்குப் பாடல் 38 மில்லியன் பார்வைகள், தமிழ்ப் பாடல் 7 மில்லியன், மலையாளம் 2 மில்லியன், கன்னடம் 1 மில்லியன் என பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' என்ற பாடல் கடந்த வாரம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் யு-டியுபில் வெளியானது. கடந்த ஐந்து நாட்களில் இந்தப் பாடல் தெலுங்கில் 15 மில்லியன் பார்வைகள், தமிழில் 2 மில்லியன், கன்னடத்தில் 2 லட்சம், மலையாளத்தில் 1 லட்சம், ஹிந்தியில் 7 மில்லியன் பார்வைகள் என அடுத்த வரவேற்பைப் பெற்ற பாடலாக உள்ளது.
இந்த இரண்டு பாடல்களுக்கும் போட்டியாக அடுத்து பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள 'ராதே ஷ்யாம்' படத்தின் முதல் சிங்கிள் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
தெலுங்குத் திரையுலகத்தின் மூன்று முக்கிய படங்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்திய சினிமாவில் அடிக்கடி பேசப்படும் படங்களாக இருக்கப் போகிறது.