ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சினிமாவில் நாடக கலைஞர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு வெகு நாட்களாக உண்டு. அதனால் அதைப்போக்க இப்போது நாடக நடிகர்கள் இணைந்து ஒரு சினிமாவை தயாரித்து வருகிறார்கள். தஞ்சை பகுதியில் உள்ள நாடக கலைஞர்கள் ஒன்றாக இணைந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு ஸ்ரீவிஸ்கர்மா கிரியேஷன்ஸ் என்ற தயாரிப்பு கம்பெனியைத் தொடங்கி உள்ளனர். இதன் மூலம் புதுவரவு என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். ஹீரோவாக நடிப்பவர் நாடக உலகம் அறிந்த நடிகரான தஞ்சை சாமி நடிக்கிறார். நாயகியாக தஞ்சை ஜூனியர் புஷ்பா நடிக்கிறார். நாடக இசை அமைப்பாளர் காரை குமார் இசை அமைக்கிறார். பி.ராஜேந்திரன் இயக்குகிறார். இதில் பணியாற்றும் அத்தனை பேரும் நாடக கலைஞர்கள்தான். "எங்களாலும் சினிமா எடுக்க முடியும். நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பதற்காகத்தான் இந்தப் படத்தை எடுக்கிறோம்" என்கிறார் இயக்குனர் ராஜேந்திரன்.