நடிப்பு உலகில் அடியெடுத்து வைத்த கிரிக்கெட் நடுவர் அனில் சவுத்ரி | ரஜினி, கமல் படத்தில் இந்த இளம் நடிகையா? | 'தனுஷ் 56' படப்பிடிப்பு செப்டம்பரில் துவங்குகிறது! | ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! | பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி? | கண்டிக்கும் நடிகர் மகன்; வார்னிங் கொடுத்த நடிகர் மகள் | திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சு | ஒத்தரோசாவில் இருந்து ஒரு நடிகன் | போட்டோ எடுக்க போய் நடிகராகியிட்டேன்! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர் நடிக்க இருந்து, பின் கைவிடப்பட்ட அவரது “உடன்பிறப்பு” திரைப்படம் |

நாகசைதன்யாவை பிரிவதாக அறிவித்த பிறகு மன உளைச்சல் காரணமாக யோகா, தியானம், ஆன்மீகம் என்று ஈடுபட்டு வந்த சமந்தா தற்போது புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார். தமிழ், தெலுங்கில் தயாராகும் இரண்டு மற்றும் ஹிந்தியில் டாப்சி தயாரிக்கும் படம் என தற்போது புதிதாக மூன்று படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
இதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு நவம்பர் முதல் வாரத்தில் இருந்து தொடங்க உள்ளது. மேலும், தற்போது சமந்தா தனது சம்பளத்தை 3 கோடியாக உயர்த்தியிருப்பதாகவும் டோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. இதன்காரணமாக தமிழ், தெலுங்கில் அதிகப்படியாக சம்பளம் வாங்கும் ஒரு சில நடிகைகளில் சமந்தாவும் ஒருவராகியிருக்கிறார்.