மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
கடந்த சனிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் இந்திய திரையுலகம் மீளவில்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவைச்சேர்ந்த விஷால், புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர் படிக்க வைத்து வந்த பிள்ளைகளின் கல்வி செலவை இனிமேல் தான் ஏற்றுக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
அதையடுத்து தமிழ் சினிமாவைச்சேர்ந்த இன்னொரு நடிகரான சிவகார்த்திகேயனும் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்டுடியோவிற்கு சென்று அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்த சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமாரின் மரணத்தை நம்பவே முடியவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருடன் பேசினேன். பெங்களூர் வருபோது சந்திக்குமாறு சொன்னார். ஆனால் நான் இப்போது பெங்களூர் வந்திருக்கிறேன். ஆனால் அவர் இல்லை. அவர் ஒரு திரையிலும், திரைக்கு பின்னாடியும் ஒரு மிகச்சிறந்த நடிகராக மனிதராக வாழ்ந்திருக்கிறார். அவர் ஒரு சிறந்த ஆன்மா. அவருக்கு மறைவே கிடயாது.
திரையில் மட்டுமின்றி திரைக்கு பின்னரும் அவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது மறைவின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் என்னால் வெளியில் வர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அதோடு புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ் குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார்.