இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த சனிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் இந்திய திரையுலகம் மீளவில்லை. இந்நிலையில் தமிழ் சினிமாவைச்சேர்ந்த விஷால், புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவர் படிக்க வைத்து வந்த பிள்ளைகளின் கல்வி செலவை இனிமேல் தான் ஏற்றுக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.
அதையடுத்து தமிழ் சினிமாவைச்சேர்ந்த இன்னொரு நடிகரான சிவகார்த்திகேயனும் புனித் ராஜ்குமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ஸ்டுடியோவிற்கு சென்று அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதையடுத்து மீடியாக்களை சந்தித்த சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமாரின் மரணத்தை நம்பவே முடியவில்லை. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருடன் பேசினேன். பெங்களூர் வருபோது சந்திக்குமாறு சொன்னார். ஆனால் நான் இப்போது பெங்களூர் வந்திருக்கிறேன். ஆனால் அவர் இல்லை. அவர் ஒரு திரையிலும், திரைக்கு பின்னாடியும் ஒரு மிகச்சிறந்த நடிகராக மனிதராக வாழ்ந்திருக்கிறார். அவர் ஒரு சிறந்த ஆன்மா. அவருக்கு மறைவே கிடயாது.
திரையில் மட்டுமின்றி திரைக்கு பின்னரும் அவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது மறைவின் அதிர்ச்சியில் இருந்து இன்னமும் என்னால் வெளியில் வர முடியவில்லை என்று தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அதோடு புனித் ராஜ்குமாரின் சகோதரர் சிவராஜ் குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி உள்ளார்.