‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

தமிழில் ரன், புதிய கீதை, கஸ்தூரிமான், சண்டக்கோழி, பெண் சிங்கம் என பல படங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின். 2014ல் திருமணம் செய்து கொண்டவர் அதன்பிறகு சினிமாவில் ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் ஜெயராமை வைத்து சத்தியன் அந்திக்காடு இயக்கிவரும் புதிய படத்தில் நாயகியாக நடித்து மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார் மீரா ஜாஸ்மின். இவர் இயக்கத்தில் ஏற்கனவே ரசதந்திரம், வினோத யாத்ரா உள்பட நான்கு படங்களில் மீரா ஜாஸ்மின் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் துபாயில் மீரா ஜாஸ்மினுக்க கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. அதையடுத்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், சினிமாவில் எனது செகண்ட் இன்னிங்சை தற்போது தொடங்கியுள்ளேன். முன்பு போலவே ஆக்டிவாக இருப்பேன், அதேசமயம் செலக்டிவான கதைகளில் மட்டுமே நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார் மீரா ஜாஸ்மின்.