கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

2000-ன் துவக்கத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து ரன், சண்டக்கோழி என இரண்டே படங்களில் ரசிகர்களின் மனதை தன் அழகாலும் நடிப்பாலும் கட்டிப்போட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மின், ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார்.
அந்தவகையில் கடந்த ஐந்து வருடங்களாக பெரிய அளவில் படங்களில் தலைகாட்டாமல் இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் ஜோடியாக மகள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கணக்கு துவங்கி தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளதை வரவேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “மீரா ஜாஸ்மின் எப்போதும் போல பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறார். உங்களுடைய நடிப்பை மீண்டும் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் சேச்சி” என கூறி மீரா ஜாஸ்மின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதற்கு மீரா ஜாஸ்மினும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.




