பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

2000-ன் துவக்கத்தில் தமிழ் சினிமாவில் நுழைந்து ரன், சண்டக்கோழி என இரண்டே படங்களில் ரசிகர்களின் மனதை தன் அழகாலும் நடிப்பாலும் கட்டிப்போட்டவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பின் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீரா ஜாஸ்மின், ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொண்டு படங்களில் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார்.
அந்தவகையில் கடந்த ஐந்து வருடங்களாக பெரிய அளவில் படங்களில் தலைகாட்டாமல் இருந்த மீரா ஜாஸ்மின் தற்போது மலையாளத்தில் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் ஜெயராம் ஜோடியாக மகள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் கணக்கு துவங்கி தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மீரா ஜாஸ்மின் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளதை வரவேற்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, “மீரா ஜாஸ்மின் எப்போதும் போல பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறார். உங்களுடைய நடிப்பை மீண்டும் திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் சேச்சி” என கூறி மீரா ஜாஸ்மின் புகைப்படங்கள் அடங்கிய ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதற்கு மீரா ஜாஸ்மினும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.