இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
பாண்டிராஜ் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், சூர்யா, பிரியங்கா அருள்மோகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'எதற்கும் துணிந்தவன்'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இப்படத்தைத் தமிழ் மற்றும் தெலுங்கில் மார்ச் 10ம் தேதி வெளியிட உள்ளார்கள். இப்படத்திற்கான தெலுங்கு டப்பிங் தற்போது நடந்து வருகிறது. சூர்யா, தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
சூர்யாவிற்கு தெலுங்கிலும் குறிப்பிடத்தக்க மார்க்கெட் உள்ளது. அவருக்கென அங்கு ரசிகர்களும் உள்ளார்கள். இதுவரையில் அவருடைய தெலுங்கு டப்பிங்கிற்கு வேறு ஒருவர் தான் குரல் கொடுத்து வந்தார். இப்போது முதல் முறையாக சூர்யாவே சொந்தக் குரலில் பேசுகிறார்.
இப்போது முன்னணி நடிகர்களின் படங்கள் பான்--இந்தியா படங்களாகத்தான் வெளியாகி வருகின்றன. 'எதற்கும் துணிந்தவன்' படமும் தமிழ் தவிர, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான்--இந்தியா படமாக வெளிவர உள்ளது