சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'நானும் ரௌடிதான்' படம் வெளிவந்து நேற்றுடன் 6 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. கடந்த ஆறு வருடங்களாக இருவரும் காதலர்களாகவே இருந்து வருகிறார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட நயன்தாரா தெரிவித்திருந்தார்.
இருவரின் திருமணம் எப்போது நடக்கும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. நயன்தாரா மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
இதனிடையே, தங்களது காதலின் ஆறு வருடக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜோடிப் புகைப்படங்களை வெளியிட்டு, “ஆறு வருடங்கள் ஆகிவிட்டது என்று தெரியவில்லை. நானும் ரௌடிதான் படத்தின் போது காத்து வாக்குல எடுத்த சில தருணங்கள்,” என தனது காதலைக் கொண்டாடுகிறார் விக்னேஷ் சிவன்.