நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் பலர் நடித்த 'நானும் ரௌடிதான்' படம் வெளிவந்து நேற்றுடன் 6 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் தான் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. கடந்த ஆறு வருடங்களாக இருவரும் காதலர்களாகவே இருந்து வருகிறார்கள். இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட நயன்தாரா தெரிவித்திருந்தார்.
இருவரின் திருமணம் எப்போது நடக்கும் என்பது சஸ்பென்ஸாக உள்ளது. நயன்தாரா மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் அவ்வளவு சீக்கிரத்தில் திருமணம் செய்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
இதனிடையே, தங்களது காதலின் ஆறு வருடக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜோடிப் புகைப்படங்களை வெளியிட்டு, “ஆறு வருடங்கள் ஆகிவிட்டது என்று தெரியவில்லை. நானும் ரௌடிதான் படத்தின் போது காத்து வாக்குல எடுத்த சில தருணங்கள்,” என தனது காதலைக் கொண்டாடுகிறார் விக்னேஷ் சிவன்.