சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

சமந்தா தனது காதல் கணவர் நாக சைதன்யாவை சமீபத்தில் பிரிந்தார். இந்த பிரிவுக்கான காரணம் குறித்து பலவாறான தகவல்கள் வெளியானது. குறிப்பாக சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார், அதனை அவரது கணவர் குடும்பம் தடுத்தது என்றும், சமந்தாவுக்கும் ஒரு காஸ்ட்யூம் டிசைனருக்கும் இருந்த நெருக்கம்தான் காரணம் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் இதனை மறுத்த சமந்தா தனது தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனாலும் பல தெலுங்கு யு டியூப் சேனல்ககளில் சமந்தா பிரிவுக்கான காரணங்கள் விவாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தன்னைப் பற்றி அவதூறாகத் தகவல்கள் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் சமந்தாவின் திருமண வாழ்க்கை குறித்தும், அவருக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் பேசியதால், அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.




