நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, தனது கணவருடனான திருமண முறிவு குறித்து சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகை சமந்தா. அப்படி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பெல்லாம், தான் செல்லும் இடங்களில் எடுத்துக்கொண்ட தனது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து அப்டேட் தகவல்களை கொடுத்து வந்தார் ஆனால் கடந்த சில நாட்களாக அவர் வெளியில் எங்கும் சென்றதாக தெரியவில்லை. அதுகுறித்த புகைப்படங்களோ தகவல்களோ எதுவும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் தான் வளர்க்கும் செல்லப்பிராணிகளான இரண்டு நாய்களுக்கும் உடல்நிலை சரியில்லை என, கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்து வைத்தியம் பார்த்துள்ளார் சமந்தா. இதுகுறித்த புகைப்படங்களும் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளன. அந்தவகையில் தனது திருமண முறிவு அறிவிப்புக்கு பிறகு சமந்தா தற்போதுதான் முதன்முறையாக வெளியே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.