தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்களை நோக்கி ரசிகர்கள் அதிகமாக வராமலே இருந்தார்கள். ஆனால், கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் வந்தனர். 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றாலும் அதற்கே பல தியேட்டர்களில் பல காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. அது இந்த வாரமும் தொடர்வதாக தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
அது மட்டுமல்ல நேற்று வெளியான 'அரண்மனை 3' படத்திற்கான விமர்சனங்கள் சரியாக இல்லை என்றாலும் அந்தப் படத்திற்கும் ரசிகர்கள் வருவது தியேட்டர்காரர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
நேற்று முதலே தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், தமிழக அரசு இன்னமும் 50 சதவீத அனுமதியையே தொடர்கிறது. தீபாவளிக்காவது 100 சதவீத அனுமதி கிடைக்கும் என திரையுலகத்தினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.




