என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழ் இயக்குனரான ஷங்கர், தெலுங்கில் ராம் சரண் நடிக்க உள்ள 15வது படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தின் ஆரம்ப விழா கடந்த மாதம் ஐதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் ஹிந்தி நடிகையான கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார் கியாரா.
“இது ஷங்கர் சாரின் படம். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என ஆவலுடன் காத்திருக்கிறேன். அவருடன் பணிபுரிவது எனக்குப் பிடித்த ஒன்று. நம்பமுடியாத ஒரு இயக்குனர். அவருடைய காலத்தில் முன்னோடியாக இருந்தவர். எனது கதாபாத்திரம் பற்றி சொல்ல முடியாது. ஆனால், போஸ்டரை வைத்து இது ஒரு அரசியல் படம் என சொல்வீர்கள்.
படத்தில் சர்ச்சையான விஷயங்கள் எதுவும் இல்லை. ஆனால், படத்தில் ஒரு அற்புதமான மெசேஜ் இருக்கிறது, அற்புதமான கதை இருக்கிறது, ஒரு பவர்புல்லான படமாக அமையும். ஷங்கர் சாரின் ஸ்டைலில் இப்படம் அமையும்,” எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. நவம்பர் மாதம் முதல் கியாரா படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார்.