இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சினிமாவில் வாரிசு நடிகர்கள் அறிமுகமாவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் திறமையும், கூடவே அதிர்ஷ்டமும் இருப்பவர்கள் தங்களுக்கென ஒரு பாதையை உருவாக்கிக் கொண்டு நிலையாக நின்று விடுகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவில் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால் என பலரை கூறலாம். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் தனது மூத்த மகன் ரோஷனை, தற்போதைக்கு ஹீரோவாக்கும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். அதேசமயம் ரோஷன் தற்சமயம் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். சல்மான்கான் நடித்த தபாங்-3 படத்திலும் இவர் பணிபுரிந்துள்ளார்.
அதுமட்டுமல்ல இன்னொரு பக்கம் நடிப்பு சம்பந்தமாக டிப்ளமோ கோர்ஸ் ஒன்றையும் படித்து வருகிறாராம் ரோஷன். சினிமாவைப் பற்றி நன்கு அறிந்துகொண்டு அதன் பின்னர் தனது மகனுக்கு விருப்பமான துறையை அவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும் என்கிறாராம் ஸ்ரீகாந்த். விஷால், கார்த்தி போன்றவர்கள் உதவி இயக்குனர்களாக பணியாற்றிவிட்டு சினிமாவை பற்றி நன்கு அறிந்து கொண்ட பின்னரே ஹீரோவாக களத்தில் இறங்கி அதில் சாதித்தும் காட்டினார். அதே பாணியைத்தான் தனது மகனுக்கும் பின்பற்றுகிறார் நடிகர் ஸ்ரீகாந்த்