சேதுராஜன் ஐபிஎஸ் : மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் பிரபுதேவா | மீண்டும் ஒரு சர்வைவல் திரில்லரில் நடிக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் | மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனரின் அரசியல் படத்தில் கைகோர்த்த நிவின்பாலி | ஹன்சிகா மீது பதியப்பட்ட எப்ஐஆரை தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இளையராஜா இசையில் உருவாகும் ஈழத்தமிழ் படம் | வெற்றிமாறன் படக் கம்பெனியை மூடியது ஏன் | கூலியில் நடித்தது மிஸ்டேக் என சொன்னாரா அமீர்கான் | ரயிலில் இருந்து குதித்த நடிகை படுகாயம்: ஆஸ்பத்திரியில் அனுமதி | பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் சமரசம் | பிளாஷ்பேக் : விஜய்க்கு 6 வயது... ஷோபாவை 2வது முறை திருமணம் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர் |
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மலையாளத்தில் 10 படங்களை கொண்ட ஆந்தாலாஜி படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இவை அனைத்தும் பிரபல மலையாள கதாசிரியர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய கதைகளை மையமாக வைத்து உருவாக இருக்கின்றன. இதில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிஜூமேனன் நடிக்கும் படமும் ஒன்று. மோகன்லால் நடிப்பில் மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்கிற வரலாற்று படத்தை முடித்துவிட்டு ரிலீசுக்கு தயாராக வைத்திருக்கும் இயக்குனர் பிரியதர்ஷன், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கி நடத்தி வருகிறார்.
பிரியதர்ஷன் இயக்கும் முதல் ஆந்தாலஜி படம் இதுதான்.. அதேசமயம் இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இத்தனை வருடங்கள் மலையாள சினிமாவில் ஒன்றாக பயணிக்கும் பிரியதர்ஷனும் பிஜூமேனனும் முதன் முறையாக கூட்டணி சேரும் படமும் இதுதான். இந்த ஆந்தாலாஜி தொடரில் சந்தோஷ்சிவன், ஷ்யாம் பிரசாத், ஜெயராஜ் உள்ளிட்ட இயக்குனர்களும் படம் இயக்க உள்ளார்கள்.