கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மலையாளத்தில் 10 படங்களை கொண்ட ஆந்தாலாஜி படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இவை அனைத்தும் பிரபல மலையாள கதாசிரியர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய கதைகளை மையமாக வைத்து உருவாக இருக்கின்றன. இதில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிஜூமேனன் நடிக்கும் படமும் ஒன்று. மோகன்லால் நடிப்பில் மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்கிற வரலாற்று படத்தை முடித்துவிட்டு ரிலீசுக்கு தயாராக வைத்திருக்கும் இயக்குனர் பிரியதர்ஷன், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கி நடத்தி வருகிறார்.
பிரியதர்ஷன் இயக்கும் முதல் ஆந்தாலஜி படம் இதுதான்.. அதேசமயம் இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இத்தனை வருடங்கள் மலையாள சினிமாவில் ஒன்றாக பயணிக்கும் பிரியதர்ஷனும் பிஜூமேனனும் முதன் முறையாக கூட்டணி சேரும் படமும் இதுதான். இந்த ஆந்தாலாஜி தொடரில் சந்தோஷ்சிவன், ஷ்யாம் பிரசாத், ஜெயராஜ் உள்ளிட்ட இயக்குனர்களும் படம் இயக்க உள்ளார்கள்.