அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் மலையாளத்தில் 10 படங்களை கொண்ட ஆந்தாலாஜி படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறது. இவை அனைத்தும் பிரபல மலையாள கதாசிரியர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய கதைகளை மையமாக வைத்து உருவாக இருக்கின்றன. இதில் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிஜூமேனன் நடிக்கும் படமும் ஒன்று. மோகன்லால் நடிப்பில் மரைக்கார் ; அரபிக்கடலிண்டே சிம்ஹம் என்கிற வரலாற்று படத்தை முடித்துவிட்டு ரிலீசுக்கு தயாராக வைத்திருக்கும் இயக்குனர் பிரியதர்ஷன், தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கி நடத்தி வருகிறார்.
பிரியதர்ஷன் இயக்கும் முதல் ஆந்தாலஜி படம் இதுதான்.. அதேசமயம் இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், இத்தனை வருடங்கள் மலையாள சினிமாவில் ஒன்றாக பயணிக்கும் பிரியதர்ஷனும் பிஜூமேனனும் முதன் முறையாக கூட்டணி சேரும் படமும் இதுதான். இந்த ஆந்தாலாஜி தொடரில் சந்தோஷ்சிவன், ஷ்யாம் பிரசாத், ஜெயராஜ் உள்ளிட்ட இயக்குனர்களும் படம் இயக்க உள்ளார்கள்.