முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

மலையாள திரையுலகில் அவ்வபோது பேன்டஸி கலந்த வரலாற்று கதைகளை படமாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஜெயசூர்யா நடிக்கும் கத்தனார் என்கிற படம் ஒன்பதாம் நூற்றாண்டு பின்னணியில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த கடமட்டத்து கத்தனார் என்கிற பேய் ஓட்டும் பூசாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெயசூர்யா.
இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. காரணம் விர்ச்சுவல் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் பாணியில் இந்த படம் உருவாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் பணி புரிவதற்காக ஹாலிவுட்டிலிருந்து எந்த தொழில்நுட்ப கலைஞர்களையும் அழைத்து வராமல் கேரளாவில் உள்ள மிகச்சிறந்த பயிற்சி பெற்ற நபர்களை வைத்தே இந்த படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் ரோஜின் தாமஸ். அதேசமயம் படத்தில் இந்த விர்ச்சுவல் தொழில்நுட்பத்தை விட அதில் சொல்ல இருக்கின்ற கதைதான் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் ரோஜின் தாமஸ்