'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள திரையுலகில் அவ்வபோது பேன்டஸி கலந்த வரலாற்று கதைகளை படமாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஜெயசூர்யா நடிக்கும் கத்தனார் என்கிற படம் ஒன்பதாம் நூற்றாண்டு பின்னணியில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த கடமட்டத்து கத்தனார் என்கிற பேய் ஓட்டும் பூசாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெயசூர்யா.
இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. காரணம் விர்ச்சுவல் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் பாணியில் இந்த படம் உருவாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் பணி புரிவதற்காக ஹாலிவுட்டிலிருந்து எந்த தொழில்நுட்ப கலைஞர்களையும் அழைத்து வராமல் கேரளாவில் உள்ள மிகச்சிறந்த பயிற்சி பெற்ற நபர்களை வைத்தே இந்த படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் ரோஜின் தாமஸ். அதேசமயம் படத்தில் இந்த விர்ச்சுவல் தொழில்நுட்பத்தை விட அதில் சொல்ல இருக்கின்ற கதைதான் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் ரோஜின் தாமஸ்