மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

மலையாள திரையுலகில் அவ்வபோது பேன்டஸி கலந்த வரலாற்று கதைகளை படமாக்கி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஜெயசூர்யா நடிக்கும் கத்தனார் என்கிற படம் ஒன்பதாம் நூற்றாண்டு பின்னணியில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் ஒன்பதாம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த கடமட்டத்து கத்தனார் என்கிற பேய் ஓட்டும் பூசாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெயசூர்யா.
இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தின. காரணம் விர்ச்சுவல் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் பாணியில் இந்த படம் உருவாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் பணி புரிவதற்காக ஹாலிவுட்டிலிருந்து எந்த தொழில்நுட்ப கலைஞர்களையும் அழைத்து வராமல் கேரளாவில் உள்ள மிகச்சிறந்த பயிற்சி பெற்ற நபர்களை வைத்தே இந்த படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குனர் ரோஜின் தாமஸ். அதேசமயம் படத்தில் இந்த விர்ச்சுவல் தொழில்நுட்பத்தை விட அதில் சொல்ல இருக்கின்ற கதைதான் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறியுள்ளார் ரோஜின் தாமஸ்




