கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மலையாள திரையுலகில் இயக்குனர், நடிகர், பாடகர் என பன்முகம் கொண்டவர் வினீத் சீனிவாசன். சமீபத்தில் அடிபொலி என்கிற ஆல்பம் மூலம் மானே ஓ மானே பாடலை பாடி மீண்டும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள வினீத் சீனிவாசன், தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் மற்றும் பிரியதர்ஷன் மகள் கல்யாணி இருவரையும் வைத்து 'ஹிருதயம் என்கிற படத்தை இயக்கி முடித்துவிட்டார்.
எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை, கேரளாவில் தியேட்டர்கள் திறந்ததும் தான் இந்தப்படத்தை வெளியிடுவது என்பதிலும் உறுதியாக இருக்கிறார் வினீத் சீனிவாசன். அதுமட்டுமல்ல, கடந்த இருபது வருடங்களுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ஆடியோ கேசட் வடிவிலும் இந்தப்படத்தின் பாடல்களை பதிவேற்ற முடிவு செய்துள்ளார். இதற்காக திங்க் மியூசிக் நிறுவனம் மூலம் ஜப்பானில் உள்ள ஆடியோ கேசட்டுகள் தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்து விட்டாராம்.
ஆடியோ கேசட்டுகள் மட்டுமல்லாமல், அதற்கு முன்பு புழக்கத்தில் இருந்த இசைத்தகடு முறையிலும் பாடல்களை பதிவேற்றம் செய்ய இருக்கிறாராம் வினீத் சீனிவாசன். ஆனால் இவற்றை படம் வெளியான பின்பே வெளியிட இருக்கிறாராம்.