ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரித்விராஜ் நடிப்பில் பிரபல இயக்குனர் ஆசிக் அபு இயக்கத்தில் 'வாரியம் குன்னன் என்கிற படம் துவங்கப்பட இருப்பதாக கடந்த வருடம் ஜூன் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியானது. 1921ல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடந்த மலபார் புரட்சியின் பின்னணியாக வைத்து இந்தப்படம் உருவாக இருந்தது. இந்தப்படத்தில் ஆங்கிலேயரை தீவிரமாக எதிர்த்து போராடிய 'சக்கிப்பரம்பன் வாரியம்குன்னத்து. குஞ்சஹம்மது ஹாஜி' என்கிற மாவீரனின் கதாபாத்திரத்தில் தான் பிரித்விராஜ் நடிக்க இருந்தார்.
அந்த மாவீரனின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக 2021ல் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்க இருந்தார்கள்.. ஆனால் தற்போது இந்தப்படத்தில் இருந்து நடிகர் பிரித்விராஜ் மட்டுமல்ல, இயக்குனர் ஆசிக் அபுவும் சேர்ந்து விலகியுள்ளார்களாம்.. தயாரிப்பாளர் தரப்பு சொன்னபடி இந்தப்படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டவில்லை எனவும், இந்தப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பல திசைகளில் இருந்து எழுந்த பிரச்சனைகளை பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்றும் காரணம் சொல்லப்படுகிறது..
அதனால் தான் பிரித்விராஜும் ஆசிக் அபுவும் இந்தப்படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இப்ராஹீம் வெங்கரா, அலி அக்பர் மற்றும் பி.டி.குஞ்சு முஹம்மது என்கிற மூன்று பேர் தாங்களும் இதே வாரியம்குன்னன் கதையை படமாக்கும் முயற்சியில் இருப்பதாக போட்டியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.