என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்ஷரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? | மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் |
பிரித்விராஜ் நடிப்பில் பிரபல இயக்குனர் ஆசிக் அபு இயக்கத்தில் 'வாரியம் குன்னன் என்கிற படம் துவங்கப்பட இருப்பதாக கடந்த வருடம் ஜூன் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியானது. 1921ல் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் நடந்த மலபார் புரட்சியின் பின்னணியாக வைத்து இந்தப்படம் உருவாக இருந்தது. இந்தப்படத்தில் ஆங்கிலேயரை தீவிரமாக எதிர்த்து போராடிய 'சக்கிப்பரம்பன் வாரியம்குன்னத்து. குஞ்சஹம்மது ஹாஜி' என்கிற மாவீரனின் கதாபாத்திரத்தில் தான் பிரித்விராஜ் நடிக்க இருந்தார்.
அந்த மாவீரனின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக 2021ல் இந்தப்படத்தின் படப்பிடிப்பை துவங்க இருந்தார்கள்.. ஆனால் தற்போது இந்தப்படத்தில் இருந்து நடிகர் பிரித்விராஜ் மட்டுமல்ல, இயக்குனர் ஆசிக் அபுவும் சேர்ந்து விலகியுள்ளார்களாம்.. தயாரிப்பாளர் தரப்பு சொன்னபடி இந்தப்படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டவில்லை எனவும், இந்தப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பல திசைகளில் இருந்து எழுந்த பிரச்சனைகளை பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை என்றும் காரணம் சொல்லப்படுகிறது..
அதனால் தான் பிரித்விராஜும் ஆசிக் அபுவும் இந்தப்படத்தில் இருந்து விலகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப்படம் அறிவிக்கப்பட்ட சமயத்தில் இப்ராஹீம் வெங்கரா, அலி அக்பர் மற்றும் பி.டி.குஞ்சு முஹம்மது என்கிற மூன்று பேர் தாங்களும் இதே வாரியம்குன்னன் கதையை படமாக்கும் முயற்சியில் இருப்பதாக போட்டியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.