'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாளத்தில் கிட்டத்தட்ட 100 படங்கள் நடித்துவிட்ட நடிகர் பிரித்விராஜ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். மோகன்லாலை ஹீரோவாக வைத்து அவர் இயக்கிய அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று முதன் முதலில் 200 கோடி வசூலை ஈட்டிய மலையாள படம் என்கிற பெயரையும் பெற்றது. தற்போது அந்த படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் ரீமேக் செய்யப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை மோகன்லாலை வைத்து இயக்கப்போவதாக கடந்த வருடம் அறிவித்திருந்தார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் தற்போது எம்பிரான் படத்திற்கு முன்னதாக மீண்டும் மோகன்லாலை வைத்து ப்ரோ டாடி என்கிற படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் படத்தின் டைட்டில் போஸ்டர் உடன் அறிவித்துள்ளார் பிரித்விராஜ். லூசிபர் படத்தை தயாரித்த மோகன்லாலின் நண்பரான ஆண்டனி பெரும்பாவூரின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது