ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கொரோனா இரண்டாவது அலை நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்க வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மருந்தை, இரண்டு கட்டங்களாக போட்டுக்கொண்டு வருகின்றனர் ஆனாலும் பல இடங்களில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபு, அரசு அதிகாரிகளுடன் பேசி, தனது சொந்த முயற்சியின் பேரில், ஆந்திராவை சேர்ந்த புர்ரிபலேம் மற்றும் சித்தாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி மருந்து தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்
இந்த இரண்டு கிராமங்களுக்கு மட்டும் தடுப்பூசி கிடைப்பதற்கு, மகேஷ்பாபு இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கு, காரணம் இருக்கிறது. மகேஷ்பாபு நடிப்பில் சில வருடங்களுக்கு முன் ஸ்ரீமந்துடு என்கிற படம் வெளியானபோது, அந்த சமயத்தில் மகேஷ்பாபு இந்த இரண்டு கிராமங்களையும் தத்து எடுத்துக் கொண்டு, அவர்களுக்கான தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றி வந்தார். இந்த நிலையில்தான் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்வதும் தனது கடமை என்பதை உணர்ந்து. இந்த பற்றாக்குறை சமயத்திலும். அந்த கிராம மக்களுக்கு அவை தடையில்லாமல் கிடைப்பதற்கு. ஏற்பாடு செய்துள்ளார் மகேஷ்பாபு. அவரது இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.