கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
கொரோனா இரண்டாவது அலை நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்க வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மருந்தை, இரண்டு கட்டங்களாக போட்டுக்கொண்டு வருகின்றனர் ஆனாலும் பல இடங்களில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபு, அரசு அதிகாரிகளுடன் பேசி, தனது சொந்த முயற்சியின் பேரில், ஆந்திராவை சேர்ந்த புர்ரிபலேம் மற்றும் சித்தாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி மருந்து தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்
இந்த இரண்டு கிராமங்களுக்கு மட்டும் தடுப்பூசி கிடைப்பதற்கு, மகேஷ்பாபு இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கு, காரணம் இருக்கிறது. மகேஷ்பாபு நடிப்பில் சில வருடங்களுக்கு முன் ஸ்ரீமந்துடு என்கிற படம் வெளியானபோது, அந்த சமயத்தில் மகேஷ்பாபு இந்த இரண்டு கிராமங்களையும் தத்து எடுத்துக் கொண்டு, அவர்களுக்கான தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றி வந்தார். இந்த நிலையில்தான் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்வதும் தனது கடமை என்பதை உணர்ந்து. இந்த பற்றாக்குறை சமயத்திலும். அந்த கிராம மக்களுக்கு அவை தடையில்லாமல் கிடைப்பதற்கு. ஏற்பாடு செய்துள்ளார் மகேஷ்பாபு. அவரது இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.