சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
கொரோனா இரண்டாவது அலை நாடெங்கிலும் வேகமாக பரவி வருகிறது பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசாங்க வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மருந்தை, இரண்டு கட்டங்களாக போட்டுக்கொண்டு வருகின்றனர் ஆனாலும் பல இடங்களில் தடுப்பூசி மருந்து பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் நடிகர் மகேஷ்பாபு, அரசு அதிகாரிகளுடன் பேசி, தனது சொந்த முயற்சியின் பேரில், ஆந்திராவை சேர்ந்த புர்ரிபலேம் மற்றும் சித்தாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி மருந்து தடையின்றி கிடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளார்
இந்த இரண்டு கிராமங்களுக்கு மட்டும் தடுப்பூசி கிடைப்பதற்கு, மகேஷ்பாபு இவ்வளவு ஆர்வம் காட்டுவதற்கு, காரணம் இருக்கிறது. மகேஷ்பாபு நடிப்பில் சில வருடங்களுக்கு முன் ஸ்ரீமந்துடு என்கிற படம் வெளியானபோது, அந்த சமயத்தில் மகேஷ்பாபு இந்த இரண்டு கிராமங்களையும் தத்து எடுத்துக் கொண்டு, அவர்களுக்கான தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றி வந்தார். இந்த நிலையில்தான் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்பாடு செய்வதும் தனது கடமை என்பதை உணர்ந்து. இந்த பற்றாக்குறை சமயத்திலும். அந்த கிராம மக்களுக்கு அவை தடையில்லாமல் கிடைப்பதற்கு. ஏற்பாடு செய்துள்ளார் மகேஷ்பாபு. அவரது இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.