கராத்தே பாபு படத்தின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனர் பாக்யராஜ்க்கு டாக்டர் பட்டம் | தனுஷ் 55வது படம் பூஜையுடன் துவக்கம் : ஷங்கர், எஸ்ஜே சூர்யா பங்கேற்பு | மீண்டும் அல்லு அர்ஜுன் படத்தில் இணையும் ராஷ்மிகா மந்தனா | ரவீனா ரவிக்கு இன்ஸ்டாகிராமில் தொல்லை கொடுத்த மர்ம ஆசாமிகள் | டூப் போடாமல் சண்டைக்காட்சியில் நடிக்கும் சம்யுக்தா | குடும்பத்துடன் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த சிவகார்த்திகேயன் | சித்தப்பாவுக்காக வழி விட்டு ஒதுங்கினாரா ராம்சரண்? | ஆக்சன் காட்சிகளை படமாக்க பிப்ரவரியில் ஜோர்டனுக்கு பறக்கும் டிராகன் குழு | ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் மூன்று இளம் பெண்கள் தற்கொலை ; சோனு சூட் வருத்தம் கலந்த எச்சரிக்கை |

தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமா ரசிகர்கள் உணர்ச்சிகரமானவர்கள். தங்கள் அபிமான ஹீரோக்களின் படங்கள் வெளிவரும் போது அவர்கள் கொண்டாடுவதைப் போல வேறு எந்த சினிமா ரசிகர்களும் கொண்டாட மாட்டார்கள். இங்கு கடந்த சில வருடங்களாகத்தான் இந்த அதிகாலைக் காட்சிகள் பிரபலம். ஆனால், தெலுங்குத் திரையுலகத்தில் 30 வருடங்களுக்கு முன்பே அதிகாலைக் காட்சிகள் நடந்தது இங்குள்ள பலருக்குத் தெரியாது.
இன்றைய தெலுங்குத் தயாரிப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் தில் ராஜு. தன்னை பவன் கல்யாணின் தீவிர ரசிகர் என வெளிப்படையாகச் சொன்னவர். பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களைத் தயாரித்த தில் ராஜுவுக்கு இப்போதுதான் பவன் கல்யாணை வைத்து படம் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
'வக்கீல் சாப்' படத்தை போனிகபூருடன் இணைந்து தயாரித்துள்ளார். இன்று அந்தப் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியில் மற்ற பவன் கல்யாணின் ரசிகர்களைப் போலவே தியேட்டரில் பேப்பர்களைத் தூவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ காட்சிதான் இன்று தெலுங்குத் திரையுலகத்திலும் ரசிகர்களிடத்திலும் ஹாட் டாபிக்.
தில் ராஜுக்கு மீண்டும் ஒரு பவன் கல்யாண் படம் பார்சேல்ல்ல்.....




