ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தமிழ் சினிமாவை விட தெலுங்கு சினிமா ரசிகர்கள் உணர்ச்சிகரமானவர்கள். தங்கள் அபிமான ஹீரோக்களின் படங்கள் வெளிவரும் போது அவர்கள் கொண்டாடுவதைப் போல வேறு எந்த சினிமா ரசிகர்களும் கொண்டாட மாட்டார்கள். இங்கு கடந்த சில வருடங்களாகத்தான் இந்த அதிகாலைக் காட்சிகள் பிரபலம். ஆனால், தெலுங்குத் திரையுலகத்தில் 30 வருடங்களுக்கு முன்பே அதிகாலைக் காட்சிகள் நடந்தது இங்குள்ள பலருக்குத் தெரியாது.
இன்றைய தெலுங்குத் தயாரிப்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் தில் ராஜு. தன்னை பவன் கல்யாணின் தீவிர ரசிகர் என வெளிப்படையாகச் சொன்னவர். பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப் படங்களைத் தயாரித்த தில் ராஜுவுக்கு இப்போதுதான் பவன் கல்யாணை வைத்து படம் தயாரிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
'வக்கீல் சாப்' படத்தை போனிகபூருடன் இணைந்து தயாரித்துள்ளார். இன்று அந்தப் படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியில் மற்ற பவன் கல்யாணின் ரசிகர்களைப் போலவே தியேட்டரில் பேப்பர்களைத் தூவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ காட்சிதான் இன்று தெலுங்குத் திரையுலகத்திலும் ரசிகர்களிடத்திலும் ஹாட் டாபிக்.
தில் ராஜுக்கு மீண்டும் ஒரு பவன் கல்யாண் படம் பார்சேல்ல்ல்.....