பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி |

தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'கேம் சேஞ்சர்' திரைப்படம் அவருக்கு கை கொடுக்காத நிலையில் அடுத்ததாக தற்போது தான் நடித்து வரும் 'பெத்தி' திரைப்படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்த படத்தை இயக்குனர் புச்சி பாபு சனா இயக்குகிறார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் சிவராஜ்குமார் நடித்துள்ளார்.
இந்த படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் மார்ச் 27ம் தேதி வெளியாவதாக இதற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இதன் ரிலீஸ் தேதியை மாற்றி ஏப்ரல் 30க்கு வெளியாகும் என புதிய அறிவிப்பை பெத்தி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் என்னவென்றால் ராம்சரணின் சித்தப்பா பவன் கல்யாண் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து நடித்து வந்த 'உஸ்தாத் பகத்சிங்' படமும் ஒரு வழியாக வேலைகள் கிட்டத்தட்ட நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதனால் தனது படத்தை பெத்தி படத்திற்காக குறிக்கப்பட்டிருந்த தேதியில் ரிலீஸ் செய்ய பவன் கல்யாண் விரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து தனது சித்தப்பாவுக்காக ராம்சரண் தனது பட ரிலீஸை தள்ளி வைத்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்புகளும் ஒரே நாளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.