ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சிங்கம்-3யில் சூர்யாவுக்கு வலுவான வில்லனாக நடித்தவர் தாகூர் அனூப் சிங். பிரபலமான இந்தி தொலைக்காட்சி நடிகர் மட்டுமன்றி பாடி பில்டிங்கில் பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக 75 கிலோ இருந்த இவரது உடல் எடை 105 கிலோவுக்கு ஏறிவிட்டது.
சரியாக அந்தசமயத்தில் தான் தெலுங்கில் ரவிதேஜா நடிக்கும் கில்லாடி என்கிற படத்திற்காக வில்லனை தேடி வந்தார் இயக்குனர் ராஜவர்மா. இதை நண்பர் மொலமாக கேள்விப்பட்டு தானே ஐதராபாத் வந்து இயக்குனரை சந்தித்து வாய்ப்பையும் பெற்று விட்டார் தாகூர் அனூப் சிங். அதை தொடர்ந்து மீண்டும் கடும் உடற்பயிற்சி செய்து தனது வழக்கமான உடல் எடைக்கு மீண்டு(ம்) வந்துவிட்டார் தாகூர் அனூப் சிங். இந்தப்படத்தின் கதையும் தனது கதாபாத்திரமும் கூட ரொம்பவே வித்தியாசமானது என கோரியுள்ளார் தாகூர் அனூப் சிங்.