மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் |

இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழை தொடர்ந்து, மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று துவங்குகிறது... இந்த சீசனையும் நடிகர் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் விபரம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் நிகழ்ச்சியின்போதுதான் தெரியவரும்.
மலையாளத்தில் பிக்பாஸ் சீசன்-2 கடந்த வருடம் ஜன-5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த மார்ச் 20ஆம் தேதி அதாவது 76வது எபிசோட் வரை ஒளிபரப்பானது. அந்தசமயத்தில் கொரோனா தாக்கம் மற்றும் அதை தொடர்ந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த நிகழ்ச்சி 76 நாட்களுடன் நிறுத்தப்பட்டது..
அதேபோல கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சில சச்சரவு நிகழ்வுகளும், அவற்றை கையாள்வதில் மோகன்லால் பாரபட்சமாக நடந்து கொண்டார் என்றும் விமர்சித்து,, அவருக்கு பதிலாக நடிகர் சுரேஷ்கோபி இந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என சிலர் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சேனல் நிர்வாகம் இந்தமுறையும் மோகன்லாலுக்கே அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.




