இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இந்தி, கன்னடம், தெலுங்கு, தமிழை தொடர்ந்து, மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று துவங்குகிறது... இந்த சீசனையும் நடிகர் மோகன்லாலே தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் விபரம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் நிகழ்ச்சியின்போதுதான் தெரியவரும்.
மலையாளத்தில் பிக்பாஸ் சீசன்-2 கடந்த வருடம் ஜன-5 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு கடந்த மார்ச் 20ஆம் தேதி அதாவது 76வது எபிசோட் வரை ஒளிபரப்பானது. அந்தசமயத்தில் கொரோனா தாக்கம் மற்றும் அதை தொடர்ந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த நிகழ்ச்சி 76 நாட்களுடன் நிறுத்தப்பட்டது..
அதேபோல கடந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்த சில சச்சரவு நிகழ்வுகளும், அவற்றை கையாள்வதில் மோகன்லால் பாரபட்சமாக நடந்து கொண்டார் என்றும் விமர்சித்து,, அவருக்கு பதிலாக நடிகர் சுரேஷ்கோபி இந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என சிலர் வேண்டுகோள் வைத்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத சேனல் நிர்வாகம் இந்தமுறையும் மோகன்லாலுக்கே அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.