ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாளத்தில், தனது தந்தையின் சொந்த தயாரிப்பில் உருவாகும் 'வாஷி' (கோபம்) என்கிற படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் டொவினோ தாமஸ். ஆச்சர்யமான செய்தியாக கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால தோழன் விஷ்ணு ராகவ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். அதேசமயம் படத்தின் நாயகன் டொவினோவுக்கும், விஷ்ணு ராகவுக்கும் இடையே ஒரு ஆச்சர்யமான பந்தமும் உள்ளது.
நடிகர் ஆவதற்கு முன்பாக, கடந்த 2012ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான தீவ்ரம் என்கிற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் டொவினோ தாமஸ். அந்தப்படத்தில் நடிகராக நடித்தவர் தான் விஷ்ணு ராகவ். அதன்பின், இயக்குனராவதற்கு முதல்படியாக 2013ல் விஷ்ணு ராகவ் நடிப்பில் ஒரு குறும்படம் இயக்க திட்டமிட்டிருந்தார் டொவினோ தாமஸ். ஆனால் அது கைகூடாமல் போனது. அதேசமயம் இந்த எட்டு வருடங்களில் சூழல் அப்படியே தலைகீழாக மாறி, டொவினோ தாமஸ் ஹீரோவாகி விட்டார். நடிக்க வந்த விஷ்ணு ராகவ் இப்போது அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனராக மாறிவிட்டார்.