மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

மலையாளத்தில், தனது தந்தையின் சொந்த தயாரிப்பில் உருவாகும் 'வாஷி' (கோபம்) என்கிற படத்தில் நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் டொவினோ தாமஸ். ஆச்சர்யமான செய்தியாக கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால தோழன் விஷ்ணு ராகவ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். அதேசமயம் படத்தின் நாயகன் டொவினோவுக்கும், விஷ்ணு ராகவுக்கும் இடையே ஒரு ஆச்சர்யமான பந்தமும் உள்ளது.
நடிகர் ஆவதற்கு முன்பாக, கடந்த 2012ல் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான தீவ்ரம் என்கிற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார் டொவினோ தாமஸ். அந்தப்படத்தில் நடிகராக நடித்தவர் தான் விஷ்ணு ராகவ். அதன்பின், இயக்குனராவதற்கு முதல்படியாக 2013ல் விஷ்ணு ராகவ் நடிப்பில் ஒரு குறும்படம் இயக்க திட்டமிட்டிருந்தார் டொவினோ தாமஸ். ஆனால் அது கைகூடாமல் போனது. அதேசமயம் இந்த எட்டு வருடங்களில் சூழல் அப்படியே தலைகீழாக மாறி, டொவினோ தாமஸ் ஹீரோவாகி விட்டார். நடிக்க வந்த விஷ்ணு ராகவ் இப்போது அவரை வைத்து படம் இயக்கும் இயக்குனராக மாறிவிட்டார்.