7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் | ஏஆர் முருகதாஸை புகழ்ந்து பேசிய ஆமிர்கான் | மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா |
கேரளாவில் அரசு முன்னெடுக்கும், "பெண்கள் சுவர்" நிகழ்ச்சியில் பங்கேற்கப்பதாக அறிவித்த சில மணி நேரங்களில், அந்த அறிவிப்பை, மலையாள நடிகை மஞ்சு வாரியர் வாபஸ் பெற்றுக் கொண்டிருக்கிறார்.
சபரிமலை விவகாரத்தில், மக்களிடம் ஆதரவு திரட்ட, வருகிற ஜனவரி ஒன்றாம் தேதி, காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 600 கிலோ மீட்டர் நீளத்திற்கு, பெண்களை வரிசையாக நிறுத்தி, "பெண்கள் சுவர்" அமைக்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார். இந்த "பெண்கள் சுவர்" நிகழ்வில், பங்கேற்க உள்ளதாக பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் அறிவித்திருந்தார். ஆனால் சில மணி நேரங்களில், தனது அறிவிப்பை அவர் வாபஸ் பெற்றிருக்கிறார். அரசியல் கலப்புள்ள நிகழ்வாக முன்னெடுக்கப்படுவதால், அதில் பங்கேற்க தாம் விரும்பவில்லை என்றும் மஞ்சு வாரியர் விளக்கம் அளித்துள்ளார்.