‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தில் எஸ்.ஐ ஆக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியவர் காமெடி நடிகர் கலாபவன் சாஜன். வில்லன், குணச்சித்திரம், காமெடியன் என எந்த ஏரியாவிலும் கொடுத்த வேலையை பிசகில்லாமல் செய்யும் சாஜனுக்குள், இயக்குனராகும் ஆசையும் மறைந்திருந்தது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பக்காவாக ஒரு ஸ்க்ரிப்ட்டை தயார்செய்து, அதை பிருத்விராஜிடமும் சொல்லி அவரை ஹீரோவாக நடிக்க வைக்க சம்மதமும் வாங்கிவிட்டார்.
ஆனால் இருவருக்குமே அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் இந்தப்படம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. இந்தநிலையில் இந்தப்படம் விரைவில் துவங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளா பிருத்விராஜ், படத்திற்கு 'பிரதர்ஸ் டே' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.