‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகை வழக்கில் சிக்கி கைதான நடிகர் திலீப்பை, மீண்டும் சங்கத்தில் சேர்த்ததற்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து சில நடிகைகள் சங்கத்தில் இருந்து விலகினார்கள். சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த பார்வதி, ரேவதி, பத்மப்ரியா உள்ளிட்டவர்கள், திலீப் விஷயத்தில் நடிகர் சங்கம் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இதுகுறித்து தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், நடிகர் சங்க நிர்வாக குழுவுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அந்த பேச்சுவார்த்தையில் பெண்கள் நல அமைப்பினர் வைக்கும் கோரிக்கைகள் குறித்து பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கப்படும் என மோகன்லால் உறுதியளித்தார். ஆனால், கடந்த சனிக்கிழமை கூட்டப்பட்ட நிர்வாக குழு கூட்டத்தில் கலந்துகொண்ட மோகன்லால், சங்க தலைவருக்கு யாரையும் நீக்கும் அதிகாரம் கிடையாது என்றும் பொதுக்குழுவுக்கு மட்டுமே இதற்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவை மாற்றும் அதிகாரம் உள்ளது” என்றும் உறுதியாக கூறியுள்ளார்.
இது பெண்கள் நல அமைப்பில் உள்ள நடிகைகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாக குழுவுக்கு கூட அந்த அதிகாரம் இருக்கிறது என்றும் அதை வைத்து திலீப் விவகாரத்தில் அவர்களால் முடிவெடுக்கலாம்.. ஆனால் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்கள்” என பொறுமுகின்றனர்.
இந்த விவகாரத்தில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதை உறுதி செய்ய இரண்டு தரப்புமே சட்டரீதியான ஆலோசகர்களை அணுகியுள்ளார்களாம்.