இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? |
தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை சினிமா பிரபலங்களை இரண்டு வகையாக பிரிக்கலாம்.. ஒன்று நடிகை ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கியவர்கள்.. இன்னொன்று அந்த பட்டியலில் சிக்காதவர்கள்.. அந்த அளவுக்கு நடிகர்கள், இயக்குனர்கள் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார் ஸ்ரீரெட்டி.
சில தினங்களுக்கு முன் தெலுங்கு சீனியர் நடிகரான ராஜேந்திர பிரசாத்தை தனது முகநூல் பக்கத்தில் வறுத்தெடுத்துள்ளார் ஸ்ரீரெட்டி. குறிப்பாக ராஜேந்திர பிரசாத் ஒரு மன நோயாளி என்றும் அவரை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.
மேலும், நடிகை மாளவிகா சினிமாவை விட்டு ஒதுங்கும் அளவுக்கு ராஜந்திர பிரசாத் டார்ச்சர் செய்தாரென்றும், நடிகைகளுக்கு எந்த அளவுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்றும், நடிகை ஹேமா அவருடன் ஏன் சண்டையிட்டாரென்றும், அவ்வளவு ஏன் அவருடைய மகள் அவரை விட்டு ஏன் ஓடிப்போனார் என்றும் ஊருக்கே தெரியும் என விளாசியுள்ளார் ஸ்ரீரெட்டி. உங்களை சீனியர் நடிகர் என்கிற வகையில் மதிக்கிறேன் என்றும் ஆனால் ஒரு மனிதனாக அல்ல என்றும் அதில் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி.