தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
கேரள மாநிலம் கோட்டையத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பேராயர் பிராங்கோ மூலக்ல் கைது செய்யப்பட்டிருக்கிறார். உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு கிறிஸ்தவ பேராயர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இது கேரளா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு ஆதரவாகவும், பேராயருக்கு எதிராகவும் கேரளாவில் பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரபல மலையாள குணசித்ர நடிகர் ஜோய் மேத்யூ தலைமையில் நேற்று மிட்டாயி இரவு பகுதியில் கண்டன பேரணி நடத்தினர்.
இந்த பகுதியில் ஊர்வலம், பேரணிக்கு போலீசார் தடை விதித்திருந்தனர். அதையும் மீறி ஜோய் மேத்யூ பேரணி நடத்தியதால் அவர் உள்ளட 24 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
"போலீசார் பேராயருக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறார்கள். அதனால்தான் தடை பற்றி எங்களுக்கு எதுவும் தெரிவிக்காமல் இப்போது வழக்கு போட்டிருக்கிறார்கள். வழக்கை சட்டப்படி சந்திப்போம்" என்கிறார் ஜோய் மேத்யூ.