சூர்யா சேதுபதியின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் : அனல் அரசு வேண்டுகோள் | பிளாஷ்பேக் : நயன்தாராவை கவர்ச்சி களத்தில் தள்ளிய 'கள்வனின் காதலி' | 'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா |
தெலுங்கில் முன்னணி இளம் நடிகராக விளங்கும் அல்லு அர்ஜூன், கடைசியாக நடித்த நா பேரு சூர்யா படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் தனது அடுத்த படத்தை தேர்வு செய்வது குறித்து குழப்பத்திலேயே இருந்து வந்தார். ஏற்கனவே இயக்குனர் விக்ரம் கே குமார் சொன்ன கதை அவருக்கு பிடித்துப்போய் ஓகே சொல்லியிருந்தாலும் அதில் எந்த அளவுக்கு வெற்றிக்கான சதவீதம் இருக்கும் என்கிற சந்தேகமும் அல்லு அர்ஜூனிடம் இருக்கிறதாம்.
தற்போதைக்கு ஒரு கமர்ஷியல் இயக்குனரின் படம் ஒன்றில் நடித்து ஒரு ஹிட் கொடுத்த பின்னால், விக்ரம் கே குமார் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் அல்லு அர்ஜூன். அதற்காக தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் த்ரிவிக்ரமைத்தான் அவர் டிக் அடித்து உள்ளாராம். தற்போது ஜூனியர் என்.டி.ஆர் படத்தை இயக்கி வரும் த்ரிவிக்ரம் அந்தப்படத்தை முடிக்கும் தறுவாயில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.