ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
கேரளாவில் வெள்ள நிவாரண பணிகளில் மருத்துவர்கள் குழு இரவு பகல் பாராமல் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றது. இந்தநிலையில் கேராவில் உள்ள இந்திய மருத்துவர் சங்க செயலாளர் டாக்டர் சுபி, மோகன்லாலுக்கும், மம்முட்டிக்கும் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
"நிவாரண முகாம்களில் உள்ள பெரும்பாலான மக்கள் உடல்ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதை விட மனரீதியாகத்தான் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களது குடும்பத்தில் சிலரை பறிகொடுத்து, சிலர் தங்கள் வீடு மற்றும் உடமைகளை பறிகொடுத்து என மனதளவில் தளர்ந்துள்ளனர். அவர்களுக்கு இப்போது தேவை ஊக்கமும் ஆதரவும் கொடுக்கும் வார்த்தைகள். நீங்கள் இருவரும் நிறைய நிவாரண முகாம்களுக்கு சென்று அங்குள்ளவர்களுக்கு வாழக்கையை எதிர்கொள்ளும் விதமாக தைரியம் கொடுக்க வேண்டும்" என கூறியுள்ளார் டாக்டர் சுபி