ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் பெரு வெள்ளத்தால் மாநிலத்தில் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வெளிமாநில மக்கள் உதவி வருகிறார்கள். தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த மழை வெள்ளம் காரணமாக மலையாள திரையுலகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளப் பாதிப்புக்கு உள்ளான 10 மாவட்டங்களில் பெரும்பாலான தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது. மாநிலமே பெரும் சோகத்தில் இருப்பதால் மக்கள் சினிமா கொண்டாட்டத்தை தவிர்க்கிறார்கள்.
இதனால் சமீபத்தில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. புதிதாக இப்போதைக்கு படங்கள் வெளிவர வாய்ப்பில்லை என்பதால் முடிந்த படங்கள் முதலீட்டுக்கு வட்டி கட்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது. படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமா தொழிலாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கிறார்கள்.
அடுத்தடுத்த வெளிவர இருந்த மம்முட்டி நடித்துள்ள ஒரு குட்ட நாடன் பிளாக், மோகன்லால், நிவின்பாலி நடித்துள்ள காயங்குளம் கொச்சுண்ணி, பகத் பாசில் நடித்துள்ள வரதன் உள்ளிட்ட படங்களிக் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வருகிற ஓணம் பண்டிகைக்குள் நிலமை சீராகாவிட்டால் ஓணம் பட வெளியீட்டிலும் மந்த நிலையே நீடிக்கும் என்று தெரிகிறது.