முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி |
மலையாள சினிமாவில் அறிவுஜீவி நடிகைகளில் ஒருவர் பார்வதி. தனித்துவமான நடிகையாக அறியப்படுகிறார். பார்வதி ஒரு படத்தில் நடித்தால் அந்தப் படம் ஓடினாலும் ஓடாவிட்டாலும் நிச்சயம் நல்ல படமாக இருக்கும் என்கிற இமேஜ் இருக்கிறது. தமிழிலும் அப்படித்தான் பூ, மரியான், சென்னையில் ஒரு நாள் ஆகியவை பார்வதி நடித்த படங்கள்.
சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறவர். நாட்டு நடப்புகள் பற்றிய கருத்துக்களை துணிச்சலுடன் கூறக்கூடியவர். பிரபல நடிகை கடத்தப்பட்டபோது அதற்கு எதிராக அதிகம் பேசியவரும் பார்வதி தான். மம்முட்டியைகூட கடுமையாக விமர்சித்தார். இதனால் லட்சக்கணக்கான பேர் அவரை பின் தொடர்கிறார்கள்.
இந்த நிலையில் தான் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவததாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது: இன்ஸ்டாகிராமில் என்னை பின்தொடர்பவர்களுக்கும், எனது கருத்துக்களுக்கு பதில் சொல்பவர்களுக்கும் நன்றி. சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து என்னை நீங்கள் ஆதரித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது.
சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். இந்த ஓய்வு எனக்கு தேவைப்படுகிறது. சிறிது காலம் சமூக வலைத்தளத்துக்கு வரமாட்டேன். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள். அன்பாக இருங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக்கிறார். அவரின் இந்த முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.