ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைவுக்கு மொழிகள் தாண்டி, இந்தியா முழுதும் இருந்து அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர். நேரில் அஞ்சலி செலுத்த வர இயலாதவர்கள் சோஷியல் மீடியா மூலம் தங்களது இரங்கலை வெளிப்படுத்தினார்கள். மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லாலும், கருணாநிதியின் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு மூத்த அரசியல்வாதி, திரையுலகின் ஜீனியஸ், சமூக நீதிக்காக போராடியவர், இதற்கெல்லாம் மேலாக சிறந்த மனிதநேயம் கொண்டவர் இன்று நம்முடன் இல்லை. தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுதிய மிகவும் சக்தி வாய்ந்த ஒருவரை நமது தலைமுறை இழந்து விட்டது. கலைஞரின் குடும்பத்தினருக்கும் அவரை சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு" என கூறியுள்ளார் மோகன்லால்.