ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
தெலுங்கில் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் சிரஞ்சீவி நடித்துவரும் சைரா நரசிம்ம ரெட்டி படம் உருவாக்கி வருகிறது. அமிதாப், நயன்தாரா, விஜய்சேதுபதி, சுதீப், தமன்னா, ஹுமா குரேஷி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன் பெய்த மழையால் படப்பிடிப்பு அரங்குகள் சேதமானதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் ஐதராபாத் பூத் பங்களா பகுதியில் இந்த படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்குகள் உரிய அரசு அனுமதி பெற்று அமைக்கப்படவில்லை என கூறி, வருவாய் துறை அதிகாரிகள் அரங்குகளை இடித்து தள்ளியுள்ளார்களாம். இந்த இடத்தை படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்ட நிலத்திற்கு சொந்தக்காரர், இதுகுறித்த தகவலை வருவாய் துறைக்கு தெரிவிக்காததால் ஏற்பட்ட சிக்கலே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது