‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இன்றைக்கு சோஷியல் மீடியாக்களில் வெளியாகும் ஒரு புகைப்படம் கூட சாமானிய நபர் ஒருவரை ஒரேநாளில் பிரபலமாக்கி விடுகிறது. அப்படித்தான் சில தினங்களுக்கு முன் கேரளாவில் கல்லூரி மாணவி ஒருவர் யூனிபார்ம் அணிந்துகொண்டு மீன்விற்பது போன்ற புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியது..
திருச்சூரை சேர்ந்த ஹனன் என்கிற அந்த மாணவி, குடும்ப சூழல் காரணமாக அதிகாலையிலேயே மார்க்கெட் சென்று மீன்வாங்கி வந்து விற்றுவிட்டு, அதன்பின் நீண்ட தூரத்தில் உள்ள கல்லூரிக்கு சைக்கிளில் சென்று படித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
சோஷியல் மீடியாவில் பரவிய இவரது புகைப்படம் ராம்லீலா பட இயக்குனர் அருண்கோபியின் கண்களில் பட, அவர் ஹனனை சந்தித்து தற்போது மோகன்லால் மகன் பிரணவ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க வைப்பதாக கூறியுள்ளார்.
கலாபவன் மணி உயிருடன் இருந்த காலகட்டத்தில் அவர் நடத்தும் மேடை நிகழ்ச்சிகளில் ஹனனுக்கு வாய்ப்பு தருவதை வழக்கமாக வைத்திருந்தாராம்.