‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
மலையாளத்தில் முன்னணி நடிகை கடத்தப்பட்ட சம்பவத்துக்கு பிறகு நடிகர், நடிகைகள் இரு அணிகளாக பிரிந்து நிற்கிறார்கள். நடிகர் திலீப்புக்கு ஆதராவாக ஒரு அணியினரும், எதிராக ஒரு அணியினரும் இருக்கிறார்கள். அடிக்கடி கருத்துக்களாலும், அறிக்கைகளாலும் மோதி வருகிறார்கள்.
நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த நடிகை மம்தா மோகன்தாஸ், “பாலியல் ரீதியாக நடிகைகள் பாதிக்கப்படுவதற்கு அவர்களும் காரணமாக இருக்கிறார்கள். அதுபோன்ற நடவடிக்கைகளை அவர்கள் உருவாக்கி கொள்வதாக கருதுகிறேன். இந்த பிரச்சினையில் நடிகைகளுக்கும் பாதி பொறுப்பு இருக்கிறது” என்றார். இந்த கருத்துக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.
இதுகுறித்து ரீமா கலிங்கல் கூறியதாவது: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாலோ, கடத்தப்பட்டாலோ பெண்கள் எப்படி பொறுப்பாக முடியும். பாலியல் வன்கொடுமை செய்தவன்தான் பொறுப்பு. தவறு செய்தவர்களை பாதுகாக்கும் சமூகமும் பொறுப்பு ஏற்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதும் செய்யாவிட்டாலும் அவர்களை நீங்கள் அவமானப்படுத்தாமல் இருப்பது நல்லது. என்று கூறினார்.
ரீமாவின் கருத்துக்கு மம்தா சொன்ன எதிர் கருத்து வருமாறு: எனது கருத்தை தவறாக புரிந்துள்ளனர். பெண்ணோ சிறுமியோ பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை யாரும் ஆதரிக்கமாட்டார்கள். பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கும் அதில் பாதி பொறுப்பு இருக்கிறது என்று நான் சொன்னது எனது சொந்த கருத்து. சினிமா பிரபலங்களுக்கு குரல் கொடுப்பதுபோல் சாதாரண பெண்கள் பாதிக்கப்படும்போது குரல் கொடுப்பது இல்லை. அவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். என்றார். மம்தாவுக்கு ஆதரவாக சிலரும், ரீமாவுக்கு ஆதரவாக சிலரும் பேசி வருகிறார்கள்.